மாயவரத்தான்.... · @mayavarathaan
28th Jun 2011 from Twitlonger
கடற்கரையில் கூட்டம் நடத்தக்கூடாது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்பது கோர்ட் உத்தரவு. அங்கே இவ்வளவு கூட்டம் கூடும் என்று கூட போலீசாருக்குத் தெரியாமல் இருக்க இது என்ன கருணாநிதி ஆட்சி அல்லக்கை போலீஸா என்ன?
தெரியும் தான். கூட்டம் கூடுவதும் தெரியும். மைக் கட்டி பேசுவார்கள் என்பதும் தெரியும். பேசியதும் தெரியும்.
ஆரம்பத்திலேயே இதையெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொல்லப்பட்டது. கோர்ட் உத்தரவு என்பதால் வழக்கு தொடருவோம் என்றும் முன்கூட்டியே சொல்லப்பட்டதாம்.
எனவே, ஆளும் தரப்புக்கும் சரி, கூட்டம் நடத்தியவர்களுக்கும் சரி.. இது ஏற்கனவே தெரிந்த மேட்டர் தான்.
கூட்டம் நடத்தவே பர்மிஷன் கொடுக்க மாட்டோம். அப்படி கொடுத்தாலும் இப்படி கூடினால் வந்து கும்முவோம் என்றெல்லாம் கருணாநிதி காலத்து போலீஸாக இல்லாமல் இரு தரப்புக்கும் நியாயமாக நடக்க போலீஸுக்கு அட்வைஸ் தந்த ‘அந்த’ நபர் தான் உண்மையிலேயே அரசியல் சாணக்கியர்!
இது புரியாமல் அல்லக்கைகள் இணையத்தில் ஆடும் கூத்தைப் பார்த்தால், ஹிஹி!