ட்வீட்டப்பிற்கு ஏன் பெண்கள் வரவில்லை. அவர்கள் வரமாட்டார்கள் வரவேண்டாம் என நிறையவே பெண்களுக்கு ஆதரவு குரல்கள். உங்கள் வீட்டுப் பெண்களை ஏன் அழைத்து வரக்கூடாது என்பது போன்ற ஆச்சர்யப்படுத்தும் கேள்விகள். சூப்பர்.
இது குடும்ப விழா இல்லை. இருந்தும் ஒரு சிலர் அழைத்து வந்திருக்கிறார்கள். அது நல்ல ஆரம்பம்.

இது சரியா தவறான்னுலாம் எனகு தெரியாது. மனதில் தோன்றியது சொல்லியிருக்கிறேன்.

வந்தால் கேலி செய்வார்கள். போட்டோ எடுப்பார்கள். சண்டை போடுவார்கள். தினமும் ரோட்டில் இறங்கி நடக்கிறோம். பலவிதமான மனிதர்களை அங்கு பார்க்கிறோம். அங்கு சில நாள் சிலர் நம்மை கேலி செய்கிறார்கள். முடிந்தால் எதிர்க்கிறோம். முடியாவிட்டால் தவிர்த்துவிட்டு நம் வேலையை பார்க்கிறோம். உடன் துணைக்கு யாராவது இருந்தால் முறையிடுகிறோம். ஆனால் சாலையில் இறங்கிப் போவதை நிறுத்திவிடுவதில்லை. சரி அது சாலை என்கிறீர்களா.

ஒரு விசேஷத்திற்கு போகிறோம். ஒரு திருமணத்திற்கு என வைத்துக்கொள்வோம். அங்கு வந்திருக்கும் அனைத்து உறவினர்களையும் நமக்கு தெரிந்திருக்காது. அதில் நன் விரோதிகளாகிவிட்ட சில உறவினர்களும் இருப்பார்கள். நம்மை பற்றி புறம் பேசுபவர்களும் பொறாமை படுபவர்களும் இருப்பார்கள். இந்த காரணங்களை சொல்லி நாம் யாரும் விசேஷங்களுக்கு செல்வதை தவிர்ப்பதில்லை. சரி இது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் விசேஷம் என்கிறீர்களா.

ஒரு திரைப்பட்த்திற்கு நண்பர்களுடன் போகிறீர்கள். வீட்டில் சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ. அங்கு நாலு பேர் குடித்துவிட்டு ரகளை செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரிந்தேதான் போகிறீர்கள். எந்த நம்பிக்கையில் போகிறீர்கள். 4 பேர் அப்படி இருந்தாலும் இந்த சமூகம் நம்மை அவர்களிடம் இருந்து காக்கும் என எண்ணத்திலோ அல்லது அவர்கள் நால்வரின் செயலை கடந்து போய்விடும் மனப்பான்மையிட்னோ அல்லது ஏதோ ஒன்று தரும் துணிவில் போகிறீர்கள். அப்படி ஒரு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகினாலும் அடுத்த முறை திரைப்படங்களுக்கு போவதை நாம் தவிர்ப்பதில்லை. எந்த நிகழ்ச்சியிலும் அசம்பாவிதம் நிகழலாம்.

நிலை இப்படி இருக்க பயமாக இருந்தது. வீட்டில் விட மாட்டார்கள் என எல்லோரும் ஒட்டு மொத்தமாய் ஒதுங்கி நின்றது சற்று மனதை உறுத்துகிறது. நாங்களெல்லாம் அத்தனை மோசமானவர்களா. அல்லது எங்கள் தோழமைகளுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை நம்பிக்கையை எங்களில் ஒரு சிலரால்கூடவா கொடுக்க முடியவில்லை. 2012 இல் திருநாவு மற்றும் ஒரு பெயர் தெரியாத கீச்சரின் மனவியையும் சேர்த்து 8 பெண்கள் வந்திருந்தனர். (2 கீச்சர்களின் மனைவியர், அமாஸ், ராஜகுமாரி, ரியல்ரேனு, கீது ட்விட்ஸ், சுபாரைட்டர், ’வாழையின்’ ஏஜேதிவ்யா ). அவர்களுக்குள் பேசி திட்டமிட்டு ஒன்றாய் வந்தார்கள் மூவர். அமாஸ் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நெகிழ்ச்சி. சுபாரைட்டர் அவரது கணவர் பத்திரிக்கையாளர் பீர் முகமதுவுடன் வந்திருந்தார். திவ்யா வாழை நண்பர்களுடன் வந்திருந்தார்.

யாரையும் குறைகூற இதை எழுதவில்லை. வாதத்திற்காகவும் எழுதவில்லை. இது எங்களின் விருப்பம். தாய் என்கிறார்கள், அக்கா என்கிறார்கள். தங்கை என்கிறார்கள் அதெல்லாம் அர்த்தமற்றதாகிவிடுகின்றன. சமூக வலை தளங்கள் இணையத்தோடு நின்றுவிடுவதில்லை. பல நல்ல விஷயங்களை நிஜத்தில் நிகழ அது உறுதுணையாக இருக்கிறது. நமது தமிழ் சீச்சுலகிலேயே அதற்குரிய நிறைய உதாரணங்கள் எல்லோரும் அறிய நடக்கின்றன.

இது ஏதோ பெண்களுகாகவோ பெண் நட்புகளுக்காகவோ ஏங்கி எழுதப்பட்டதும் இல்லை. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த விளக்கங்களை சொல்ல முற்பட்டிருக்கிறேன். இந்த கோணத்தில் இருந்தும் இதை பாருங்கள். நாங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களை போன்ற சாதாரண மனிதர்கள்தான். வர விருப்பமில்லை என்பவர்களை பற்றி இங்கு பேசவில்லை. அல்லது அனுபதி கிடைக்காதர்களை பற்றி பேசவில்லை. முடியும் ஆனால் பயமாய் இருக்கிறது என்பவர்களுக்காக மட்டுமே இந்த வரிகள் மொக்கைகள். அடுத்த ட்வீட்டப்பில் ஒரு சில பெண் ட்வீப்புகளையாவது எதிர்பார்க்கும் ஒரு சராசரி சக ட்விட்டர். மகிழ்ந்திருப்போம் மனநிறைவுடன்.

Reply · Report Post