முதலில் சொல்லிக்கொள்ள விரும்புவது நேற்றிரவு, “தக்காளி பாய்ஸ்” ஐடியில் இருந்து (யாருக்கும் மென்ஷன் போடாமல்) வசை பாடி வந்த கீச்சுக்கள் அனைத்தும் நான் (@SelvaaRocky) சுயநினைவுடன் மது அருந்தாமல் (பழக்கம் இல்லை) கீச்சியது.

ட்விட்டர் வேண்டாம் என்று வெளிநடப்பு செய்து ஒரு மாதம் ஆகிப்போச்சு, நேற்றிரவு தற்செயலாக வேடிக்கை பார்க்க வந்த என் கண்ணில் பட்டதுதான், நான் வசைபாடியதாக குறிப்பிடும் பெண்ணின் கீச்சு; “ஒரு நாதாரியின் அக்காவிற்கு விபத்து, ஐயஹோ, என்னே சந்தோசம், சாகட்டும்!!! Godbless! Godbless! Peace! WhiteFlag! ROFL!” இதை பார்த்ததும் சற்று குழம்பிய நான் பின்பு தெரிந்து கொண்டது; நேற்று முன்தினம் என் நண்பனின் அக்கா விபத்துக்குள்ளாகி அதே இடத்தில் அம்மாவையும் இழந்து மருத்துவமனையில் அவசர பிரிவில் இருக்கும் பெண்ணிற்கு தான் அந்த சாபம் என்று. இதை நண்பனிடம் பகிர்ந்தால் அவன் அழுவான் என்று அவனிடம் சொல்லாமல் வேறு யாரிடமும் சொல்லாமல் தக்காளி பாய்ஸ் ஐடியில் நுழைந்து நானே கீச்சியதுதான் அந்த வசை பாடல்.

அந்த கீச்சை பார்த்ததும் ஒரு தம்பியாகவோ, அண்ணனாகவோ, அல்லாமல் ஒரு சராசரி மனிதனாக அந்நேரம் வந்தது கோவமும் ஆத்திரமும் தான். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பெண்ணை சாகட்டும் என்று சொல்வது உங்களுக்கு இயல்பாக, பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் எனக்கு அல்ல.

அண்ணன், தம்பி ஒவ்வொருத்தனுக்கும் வர வேண்டிய நியாயமான கோவமாகத்தான் அதை நான் பார்க்கிறேன். நண்பனின் அக்கா என்று இல்லை யாராக இருந்திருந்தாலும் இதே மாதிரி தான் நான் திட்டியிருப்பேன், இனிமேல் பார்த்தாலும் அப்பிடித்தான் திட்டுவேன்.

முதலில் மென்ஷன் போடாமல் திட்டினேன், பிறகு அந்த பெண்ணிற்கு மென்ஷன் போட்டு கேட்டது இதுதான்; “உனக்கு அறிவே இல்லையா” இருந்தால் ஆம் என்று சொல்லியிருக்கலாம், இல்லையென்றால், இல்லை என்றிருக்கலாம். ஆனால் அதற்கு வந்த பதில்; “டேய் போடா நாயே, நீதாண்டா நீ சொன்னதெல்லாம், உங்கக்கா செத்து தாண்டா போவா.... நீ பேசினா எல்லாமே நீ தான்” இவ்வளவுதான் நடந்தது.

மேற்கூறிய பெண்ணிடம் எனக்கு எந்த பகையும் கிடையாது, சில மாதங்கள் முன்னாடி ட்விட்டரில் பாலோ பண்ணினாங்க நானும் பாலோ பண்ணினேன். இரண்டு மூன்று முறை மென்ஷன் போட்டு பேசியிருப்போம். இதுவரை எந்த தவறான பேச்சும் நான் உதிர்த்ததில்லை, அவுங்களும் தான்.

ஆனால் அதற்கு அந்த பெண்ணின் காரணம் அறிந்தபோது மிகவும் வியப்பாக இருந்தது, இரண்டு நாட்கள் முன்னாள் இரவில் என் நண்பர்களுடன் சண்டையாம் அதில் அவர்கள் அசிங்கமாக பேசினார்களாம். ஆனால் அப்போது அந்த பெண்ணும், இன்னொரு பெண்ணும் சேர்ந்து “பக்கிங் பாஸ்கர்” சொன்னதையும் அவர்களின் மனைவி வேறு ஒருவனுடன் சேர்த்து சொன்னதையும், மேலும் ஆங்கிலத்தில் அசிங்கமாக பேசியதையும் யாம் அறிவோம் (அது ஆங்கிலத்தில் பேசியதால் கெட்ட வார்த்தை இல்லையாம், கணக்கில் கொள்ள பட மாட்டாதாம்). (ஆதாரமும் இருக்கு) அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் வாய் தவறி உதிர்த்ததுதான் அந்த பெண்ணிற்கு சாபம் குடுத்த வார்த்தைகளாம்.

இதுதான் காரணம் என்றால் எனக்கும் அதேதான் காரணம், ஆத்திரத்தில் வாய் தவறி...... ஆனால் எனக்கு வாயும் தவறவில்லை, கையும் தவறவில்லை.

அவர்களுடன் சண்டை என்றால் அந்த சண்டையை அவர்களுடன் அதே இடத்தில் முடித்திருக்க வேண்டும். (ஆண்கள் முடித்து விட்டார்கள், மறந்தும் விட்டார்கள்) ஆனால் இந்த பெண்ணின் பழிவாங்கும் படலம் தான் இங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண்ணின் உயிருக்கு குடுத்த சாபம் “அவ செத்துதான் போவா”
நான் எழுதியதில் ஒரு வரியை மறுக்க நேரிட்டால் கூட ஆதாரத்துடன் வெளியிட நான் தயார்.

சனியன் சகட

Reply · Report Post