சித்திரையில் நிலாச்சோறு பாடல்களை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்... உத்தேசமாக கேட்கவும் போவதில்லை, ஹிட் பாடல்கள் கிடையாதென்பதால்! மேலும் ராஜா படங்களுக்கே நேரும் மார்க்கெட்டிங்க தந்திராபயோகங்களால் பாடல்கள் வெளிவந்து ஒரு மாதம் ஆகியும் சிடிக்கள் கிடைப்பதில்லை. தலைமறைவு இயக்கம் போல் ராஜா பாடல்களை தேடித் தேடி கேட்கும் எங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனாலும் எங்கள் முயற்சி வீணாவதில்லை. முக்கியமாக முக்கி முக்கி கேட்டு பிடிக்க செய்து கொள்வதெல்லாம் கிடையாது. கோடையில் மழை போல் வெள்ளத்தில் கரை போல் வெயிலில் நிழல் போல், வெகு இயல்பாய் முதல் முறை கேட்கும் போதே வசிகரீத்து விடுகிறது. இனி இந்த ஜென்மம் முழுதும் இந்த வசீகரம் தொடரும். நாளாக நாளாக போதை ஏறும் வைன் போலே பாடல்கள் எம் ஜீவனை நிரப்பும். நாங்கள் பாக்கியவான்கள்.

Reply · Report Post