rozavasanth

rozavasanth · @rozavasanth

27th Jun 2013 from TwitLonger

மனம் போகிற போக்கில் தோன்ற எழுதியது…

அப்போது வீட்டில் டேப் ரெகார்டர் கிடையாது; காதல் ஓவியம் பாடல்களை கேட்க எத்தனையோ நாட்கள் டீக்கடைகள் முன்னே மணிக்கணக்கில் (8 பாடல்கள்) நின்றிருக்கிறேன். பள்ளியில் இருந்து வரும் வழியில் தெருவில் யார் வீட்டிலிருந்தோ ஒலிக்க, அங்கேயே அடுத்த அரை மணி நேரம். அந்த காலத்தில் பாட்டை கேட்கவென்றே மொக்கை படங்களை பார்க்க போவதுண்டு. 'காதல் ஓவியம்' அதற்கு வாய்ப்பு தராமல் படுதோல்வியில் பெட்டிக்குள் உடனடியாக சுருண்டு கொண்டது. ஆனால் பாடல்கள் பெரிய ஹிட். ஒரு முறை கூட பாடல்காட்சியை பார்த்ததில்லை. கேட்டுக்கேட்டு மனதில் காட்சிகள் படிமங்களாக அமைந்து கொண்டன. பல வருடங்கள் கழித்து வீட்டில் டேப் ரெகார்டர் வந்த போது வாங்கிய முதல் கேசட் 'காதல் ஓவியம்'. பாடும் பழக்கமும், பயிற்சியும் அற்று போய்விட்ட இன்று கூட காதல் ஓவியம் பாடல்களை அன்று போலவே உணர்ச்சியுடன் பாட முடிகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து பாட்டை யூட்யூபில் படிமங்கள் சிதைய பார்த்திருக்க வேண்டாம். அற்புதமான இசைக்கு சிறிய நியாயம் கூட செய்யத் தெரியதவனெல்லாம் என்ன மயித்துக்கு இசை சார்ந்த திரைக்கதை அமைக்கிறான் என்ற கேள்வி எழுந்தாலும்.. அப்படி எல்லாம் நாம் திட்டக்கூடாது, இப்படி ஒரு திரைக்கதை அமைந்ததால்தான் இப்படி ஒரு பாட்டை ராஜா கொடுத்தார். ஆனால் இவர்கள் எப்படி தன்னை சிகரம், இமயம் என்று நினைக்கிறார்கள், மற்றவர்கள் அப்படி அழைக்கும்போது மனதிற்குள் எப்படி கூசாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. அதைவிட ராஜாவின் 'அகங்காரம்' இவர்களின் ஈகோவை தூண்டி வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்தியது என்ற அபத்தம்தான் ஜீரணிக்க கஷ்டமாக உள்ளது.

காட்சி அமைப்பு அன்ற வகையில் பாலசந்தர், பாரதிராஜாவை விட மணிரத்தினம் ராஜாவின் இசைக்கு நியாயம் செய்துள்ளதாக தோன்றுகிறது.

Reply · Report Post