NChozhan

NaSo · @NChozhan

8th Jul 2013 from TwitLonger

சிங்கம் II வெற்றி சிலருக்கு பீதியை கிளப்பி விட்டுடுச்சி போல. முன்னே எப்போ பாரு விளம்பரத்துல குடும்பத்துல இருக்கிற மொத்தப் பேரும் வந்து டார்ச்சர் பன்றாங்கன்னு சொல்லிக் கிண்டல் அடிச்சாங்க. அதன் வருமானம் எல்லாம் அகரம் பவுண்டேஷனுக்கு போகுதுன்னு சொன்னவுடனே என்ன பன்றதுன்னு தெரில.

இப்போ அவரைக் குள்ளம், அவர் அனுஷ்காவுடன் டான்ஸ் ஆட ரொம்ப கஷ்டப்படுறார், அகரம் பவுண்டேஷன் விளம்ரத்தை பெருசா செய்யறார்ன்னு நக்கல் அடிக்கிறாங்க. இது நம்ம ஊர்ல எப்பவும் நடக்கிறது தானே. எதுவும் முடிலயைன்னா தனிமனித தாக்குதல்.

இதுல துப்பாக்கி வசூலை மிஞ்சிடுச்சுன்னு சொன்னவுடனே இன்னும் காட்டமா கமெண்ட்ஸ். 'தலிவா' வரட்டும் பார்க்கலாம்னு டயலாக் வேற.
நாங்க அதையும் பார்க்கத் தானே போறோம்? சுறா, ஆதி, வில்லு எல்லாம் பார்த்தவங்க தானே நாங்க..

பாவம் சிவக்குமார், சூர்யா வளரும் போது காம்ப்ளான் எல்லாம் கிடைக்கல போல.

பிகு: நான் சூர்யா இரசிகன் எல்லாம் கிடையாது. :'(

Reply · Report Post