idonashok

Ashok R · @idonashok

11th Aug 2013 from TwitLonger

அன்புள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு. இந்திய வீரர்கள் ஐந்து பேரை உங்கள் ராணுவத்தினர் சுட்டதற்காக இந்திய அரசு கடுமையான கண்டனங்களையெல்லாம் உங்களுக்கு வழங்கியுள்ளது. எச்சரிக்கை கூட விடுத்திருக்கிறது. ஆனால் பல வருட காலமாக இந்தியாவின் தென் பகுதியில் உள்ள இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கொன்றுள்ள இலங்கையை எதிர்த்து இந்திய அரசு எச்சரிக்கை அல்ல, ஒரு ஏப்பம் கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன நீங்கள் இலங்கையை விட மட்டமாக போய்விட்டீர்கள்? நீங்கள் கொன்றால் இந்திய உயிர், இலங்கை கொன்றால் இல்லாத உயிரா? இந்தக் கடிதத்தைப் படித்து உங்களுக்கு கோபம் வரும் என நம்புகிறேன். நரம்புகள் புடைக்கும் என நம்புகிறேன். அணு ஆயுத அரசான உங்களை இலங்கை என்ற கேவலமான குட்டி நாட்டை விட கேவலமாக இந்தியா நடத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தயவுசெய்து இந்தப் பிரச்சினையை ஐநாவில் எழுப்பி நீங்கள் இலங்கையை விட மட்டமான நாடு இல்லை என்பதை நிரூபியுங்கள். இப்படிக்கு உலக அரங்கில் பாகிஸ்தானின் மானத்தில் மேல் ஆர்வமாய் இருக்கும் இந்தியன். நன்றி வணக்கம்.

Reply · Report Post