Kalai flash · @kalai_flash
10th Apr 2014 from TwitLonger
இப்பிடி ஒரே பொய்ய திருப்பி திருப்பி சொல்லியே ஒன்றும் நடக்காத ஒரு விஷயத்த பூதாகரமாக மாற்றி குளிர் காய்ந்து உள்ளவர்களில் ஒரு சிலர் வேண்டுமானால் இதை நம்புவார்கள் 1லட்சத்து 72 ஆயிரம் கோடியை வரவேண்டிய வருமானம் ஏலம் முறைகேடு என்று தான் குற்ற சாட்டு 1லட்சத்து 72 ஆயிரம் கோடியை ராசா எடுத்துகொண்டு ஓடி போகமுடியுமா தணிக்கை அதிகாரிகளிடம் உள்ள அறிக்கை என்பது எப்போதும் projection future report ஆன ஆடிடர் தரும் ரிப்போர்ட்.இதில் உள்ள ஒரு எண் தான் 1லட்சத்து 72 ஆயிரம் கோடி. அது வருமானத்தை குறிக்கும் குறியீடு தானே தவிர ஒரேயடியாக ராசா எடுத்தது மாதிரி திரித்து கூறியது ஒரு சில ஊடகங்கள் செய்த புரட்டு வேலை அதை அப்பிடியே ப்ளேட் ஐ திருப்பி அவ்வளவு பெரிய தொகையான 1லட்சத்து 72 ஆயிரம் கோடி ஊழல் என்று மாற்றி விட்டார்கள் ...அவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்ய ஒரு தனிப்பட்ட இரண்டு பேர் செய்ய முடியாது டான்சி ஊழல், கொடைக்காணல் பிலசன்ட்ஸ்டே ஹோட்டல் ஊழல், 9 கோடி கலர் டிவி ஊழல் , 200 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் ,வருமான வரி ஏய்ப்பு வழக்கு,200 கோடி ஸ்பிக் முதலீட்டு வழக்கு, 77 கோடி ரூபா,டிட்கோ முதலீட்டு பத்திர வழக்கு, 10 கோடி பரிசு பொருள் வழக்கு, 6 கோடி திராட்சை தோட்ட வழக்கு ,12 கோடி விளம்பர நிறுவன மோசடி வழக்கு ,200 கோடி கிரானைட் ஊழல் வழக்கு,18 கோடி வருமான வரி ஏய்ப்பு வழக்கு, 2 கோடி வெளிநாட்டு செக் நன்கொடை வழக்கு இப்பிடி 12 க்கும் அதிகமான ஊழல் வழக்குகளில் சிக்கிய ஜெ ஒவ்வொரு வழக்கிலும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி உருட்டி மிரட்டி இன்னும் பல சொல்ல முடியாத அளவிலான வேலைகளின் மூலமே 10 வழக்கிலி இருந்து விடுபட்டு உள்ளார்... . பெங்களூருவில் 15 வருடமாக 200 வாய்தா வாங்கியது அவமானம் இல்லையா.. ஊழல் குற்றங்களில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களால் தலா மூன்று ஆண்டு,, இரண்டாண்டு தண்டனைகள் பெற்ற அவமானம் தமிழ் நாட்டுக்கல்லவா ? இதை சொல்ல மாட்டார்.. தான் 30 கார்கள் 30 கலர்களை வைத்திருப்பதை ஏன் சொல்ல மறுக்கிறார் ? 5600 கோடிகளுக்கு சொத்துக்கள் 3600 ஏக்கர்கள் நிலம்.. உள்ள ஒரே முதல்வர் ஜெயலிதா மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... 2ஜி வழக்கு விசாரணைக்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் நீதிமன்றமே கூடாமல் இருக்கிறது... பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு இது என்பதால் ராசா தைரியமாக இருக்கிறார். ஏன் ஜாமீன் கூட லேட் ஆக தான் மனு செய்தார். இப்போது கூட மக்களிடம் விளக்கம் சொல்லுகிறார். ஆனால் ஜெ சொத்துகுவிப்பில் உள்ள சொத்துக்கள் தனது இல்லை என்று தைரிய லக்ச்மி யாக சொல்ல வேண்டியது தானே. முடியாது ஏன் என்றால் அது பூரா கொள்ளையடித்தது என்கிற குட்டு நீதிமன்றம் மூலம் இன்னும் சில வாரங்களில் உறுதி செய்யப்படும் என்பதால் பீதியில் மத்தியில் ஆட்சியை அங்கம் வகித்தால் உருட்டி மிரட்டி வழக்கை விடுவிக்க பிளாக் மெயில் பண்ணலாம் அல்லவா வாஜ்பாயி ஐ செய்தது போல .. அதனால் தான் அம்மையார் ச்பெக்ட்ரும் பற்றி ஊதி ஊதி பெரிசாகினால் தன மேல் உள்ள உண்மையான வழக்கை மக்கள் மறந்து விடுவார்கள் என ஒரு நப்பாசை..அதனால் தான் சொல்லப்படுவது spectrum வழக்கு ஒரு மாயை பொய் வழக்கு என்று...ஆனால் ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கு 15 ஆண்டுகளாக 200 வாய்தாக்கள் மூலம் இழுத்தடிக்கப்படுகிறதே இதெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இருக்கும் என நினைத்து தான் ஜெயா ஒட்டு கேட்டு வருகிறார்... ஆனால் எல்லா ஊழல்களும் மக்கள் மனதில் பதிந்துள்ளதை அறியவில்லை இன்னும்.. ஆனால் மே 16ல் அறிந்துகொள்வார்..