விஜய் அறிமுகப்பாடல் #புலி#பாடல்#1


*பல்லவி:

எங்கமக்கா எங்கமக்கா
எந்திரிங்க எங்கமக்கா
எங்கமக்க ஒண்ணுபட்டா
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா

காத்திருக்க நேரம் இல்லடா
தெம்மாங்கு பாடும்
காத்துக்கென்ன கைவிலங்கு போடா

கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள
தம்பி தம்பி நம்பி நம்பி வாடா

கொடுமையெல்லாம் அடிபடவே
அடிமை இனம் விடுபடவே
கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க
எழுந்து வருகுதே…
ஏய் புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி

சுற்றிவரும் பகைமுடித்து
வெற்றிபெறும் வீரப்புலி
புலிபுலி புலிபுலி புலிபுலி புலிபுலி

மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

*சரணம் 1:

நாடு பறிபோகலாம்
மானம் பறிபோகுமா..?
உசுரோட புலித்தோல உரிக்க முடியுமா?

வேர்வை சிந்தாமலே
வெற்றி உண்டாகுமா?
உளிபடாத பாறை ஏதும் சிற்பமாகுமா?

மண்ணை மீறாமலே
விதையும் முளைக்குமா?
தறிபடாத நூலு என்ன ஆடையாகுமா?

எங்கள் தாய் நாட்டையே
வஞ்சம் வந்தாளுமா?
புலிக்குகையில் எலிவந்து வாலை ஆட்டுமா?

உன்னை நீ நம்பி உழைத்தே பாரு
ஊரு தன்னாலே மாறாது

மாற்றம் உன்னோடு தொடங்கட்டும் தோழா
நான் விழிக்கும் போது
எனது கனவு பலிக்கவேண்டுமே

புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

*சரணம் 2:

ஆந்தை பருந்துமே
வானில் பறக்குதே
அழகுமிக்க கிளிகள் மட்டும் கூண்டில் வாடுதே

எங்கள் தாய்நாட்டிலே
எல்லாம் பாழாகுதே
எங்க மண்ணும் எங்க வீடும்
ஏலம் போகுதே

சித்தம் கொதிக்குதே
ரத்தம் தீயாகுதே
யுத்தம் செய்ய வருகவென்று
சத்தம் கேட்குதே

திட்டம் இருக்கணும்
தொட்டா ஜெயிக்கணும்
நான் தொட்டுவைத்த திட்டம் ஏதும்
தோற்றதில்லையே

வானம் எப்போதும் தீர்ந்தா போகும்
வாழ்வில் நம்பிக்கை தீராதே

நாளை நம்கையில் வந்தே தீரும்
வலது காலை
எடுத்து வாடா இளைய தோழா

புலிபுலிபுலிபுலி புலிபுலிபுலிபுலி
மானம் வீரம் நாடு காக்க
வானம் வரை பாயும் புலி

Reply · Report Post