படித்துறை பாண்டி® · @iampadithurai
25th Jan 2016 from TwitLonger
சாதிக்க வந்தவர்கள் சடலமாக வந்திருக்கின்றனர்
மாணவிகளின் பெரயர்களை
மோனிசா
சரண்யா
ப்ரியங்கா
என பட்டியலிட்டு கூற தெரிந்த காவல் மற்றும் ஊடக துறைக்கு கல்லூரி மட்டும் தனியார் நிறுவனமாக தெரிந்திருக்கிறது நியாயம் நீதியின் பக்கமா இல்லை நிதியின் பக்கமா என்பது அப்பட்டமாக கொலையா தற்கொலையா என ஊர்சிதமாகாத வழக்கின் அனுமான ஊடக வெளியீடு கூட கல்லூரியின் எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகளின் சடலங்கள் மீட்பு என்பதிலும் திறம்பட செயல்பட்டிருக்கிறது நீதியை மிஞ்சிய நிதியின் ராட்சத விளையாட்டு இந்த சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் ஐயம் தெரிவித்த பின் மாவட்ட ஆட்சியாளரால் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டதென்பது கேள்வியாக கேட்கப்படாவிட்டால் கொடுப்பதை வாங்கிவிட்டு கொல்லியிட்டு இருக்கும் அரசாங்கமும் அதிகாரிகளும் இந்த பிரச்சினையை அனுமானத்தின் பெயரில் கல்லூரி முதல்வர் கலா"நிதி"யை கைது செய்த காவல்துறை ஆசையின் பெயரால் நிதியை மட்டும் வைத்துக்கொண்டு கலா வை விடுதலை செய்துவிடுமா என்பதில் அனுமானம் ஏதுமில்லை ஆணித்தரம் இருக்கிறது அடிமனதில் கல்லூரி இல்லை இல்லை பெயரற்ற தனியார் கல்லூரியின் நிர்வாகி வாசுகியின் மகனும் மாணவருமான சோகர்(சேகர்??? சோகர்???)வர்மாவையும் கைது செய்தனர் விசாரணை நடத்தி வருகின்றனர்....
வெளியில் கூறுவது விசாரணையாகவும் உள்ளே நடத்துவது பேரமாகவும் இருந்தால் தெரியவா போகிறது அப்பாவி அப்பா அம்மாவுக்கு