பைரவா-4:உச்சகட்டத்தில் எதிரியோடு மோதுவதற்கு முன்னால் ஊர்கூடிப் பாடும் பாட்டு



பாப்பா பாப்பா
பப்பரப் பப்பா – சும்மா
வாப்பா வாப்பா
வந்தாடப்பா – நான்
ஒன் ஆளப்பா

டாப்பா டாப்பா
டான்ஸாடப்பா – இன்னும்
டீப்பா டீப்பா
லவ் பண்ணப்பா – நீ
என் ஆளப்பா

அன்பு கொடுத்தா – சொந்த
ஆவி கொடுப்பேன் – சும்மா
வம்பு வளத்தா – அட
ஆவி எடுப்பேண்டா
கத்தி எடுத்து – புத்தி
தீட்டி முடிப்பேன் – பகை
கொத்தி முடிப்பேன்

எங்காளப்பா – நீ
எங்காளப்பா – இங்க
எல்லாருமே – இனி
ஒங்காளப்பா

கெட்டவன
வெட்டிச் சாய்க்கவந்த – புதுக்
கட்ட பொம்மன் நீயா
*
நரிக நாட்டாமை
நடத்தும் உள்ளூரில்
புயல்போல் வந்தாயே புலியே புலியே

அறிவு ஒருகையில்
அருவா மறுகையில்
அதுதான் என்பாணி கிளியே கிளியே

ஊருக்குப் பத்துப்பேர்
ஒம்போல வந்தாலே
யாருக்கும் தீங்கில்ல
வெற்றிச் செல்வா வா வா

பொது எதிரி யாருங்க
போராடிப் பாருங்க
வேரோட வீழ்த்துங்க
உறுதி எடுங்க உருமி அடிங்க
*
கிழக்கே இல்லாம
திசைகள் மூணாச்சு
எமக்கு நீதானே கிழக்கு கிழக்கு

வெளிச்சம் வருமட்டும்
கிழக்கும் கறுப்புத்தான்
இருட்டத் தீ வச்சுக் கொளுத்து கொளுத்து

ஒரு வார்த்த சொன்னாலே
ஊரே ஒம் பின்னாலே
நீவாய்யா முன்னாலே
யுத்தம் செய்ய வா வா

யுத்தங்கள் இல்லாம
இதிகாசம் நிக்காது
ரத்தங்கள் சிந்தாம
உலகத் தீமை ஒழிவதேது?

Reply · Report Post