Ramachandran · @lalitha_ram
21st Aug 2019 from TwitLonger
Madurai Somu - Audience Connect
மதுரை சோமு அவர்களின் கச்சேரிகளுக்கு வந்த கூட்டத்தில் பெரும்பாலான ரசிகர்கள் பாமர மக்கள். ராக, லய நுணுக்கங்களை உணராதவர்கள். தெய்வம் படத்தில் சோமு பாடிய மருதமலை மாமணியே பாடலைக் கேட்டு சோமுவின் பால் ஈர்க்கப்பட்டவர்களும் ஏராளம். அவர்களையெல்லாம் கூட கல்யாணி, காம்போதி, பைரவி, தோடி பாடி மணிக்கணக்கில் கட்டிவைக்க சோமுவால் முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்களுடனான தொடர்பு. ஆயிரம் பேர் வந்திருந்தாலும், அங்கிருந்த ஒவ்வொருக்கும் “சோமு எனக்காகப் பாடுகிறார்” என்கிற உணர்வை அவரால் ஏற்படுத்த முடிந்தது. இதைப் பற்றி சோமுவின் உறவினரும், பல வருடங்கள் உடனிருந்து தம்புரா மீட்டியவருமான கிருஷ்ணமூர்த்து அவர்கள் கூறியதை நான் சமீபத்தில் பகிர்ந்துகொண்டேன். அதன் காணொளி:
https://www.youtube.com/watch?v=p4OWsp1K6-4